NEWS AND BLOG

Ceylon Estate Staffs' Union (CESU)


பஸ்துன் ரைய்கம் கோரளை கிளைக்கு புதிய நிர்வாக கிளைத்தலைவர்கள் போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை தோட்ட சேவையாளர் சங்கத்தின் பஸ்துன் ரைய்கம் கோரளை கிளையின் ஈராண்டு பேராளர் மாநாடு கடந்த பெப்பிரவரி மாதம் 19 ஆம் திகதி அகலவத்தை ரமிர விழா மண்டபத்தில் நடைப்பெற்றது. பஸ்துன் ரைய்கம் கோரளை கிளையின் அங்கத்தவர்களின் பங்களிப்புடன் நடைப்பெற்ற இம் மாநாட்டில் எதிர்வரும் இரு ஆண்டுகளுக்கான கிளைத் தலைவர்கள் தெரிவு இடம் பெற்றது. 

அங்கு பஸ்துன் ரைய்கம் கோரளை கிளையின் புதிய கிளைத் தலைவராக பதுரளிய டெல்கித் தோட்டத்தில் எல்.டீ.சஞ்சீவ அவர்கள் போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டதுடன் துணைத் தலைவர்களாக மொஹமடி தோட்டத்தில் கே.எல்.பீ.இந்திக, பய்யாகல தோட்டத்தில் எச்.டப்லியு.ஆர்.கே.குணவர்தன, நிவ்செட்டல் தோட்டத்தில் பீ.கசுன் தயாதிலக, பல்லேகொட தோட்டத்தில் ஜே.கே.டீ.ஹேவாவிதாரணகே ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர். கிளைப் பொருளாளராக மத்துகமை சிறிகந்துர தோட்டத்தின் ஏ.என். கிறிஷான் பிரதீப் மற்றும் தணிக்கை அதிகாரியாக பாதுக்கை தோட்டத்தில் பாலித குணவர்தன ஆகியோர் போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டனர். எதிர் வரும் இரு ஆண்டுகளுக்கான பஸ்துன் ரைய்கம் கிளையின் செயலாளர் ஆக இங்கிரிய ஹல்வத்துர தோட்டத்தில் எம்.எல்.சந்தன மனோஹர அவர்களை நியமிக்க புதிய கிளைத் தலைவர் எல்.டீ.சஞ்சீவ அவர்கள் நடவடிக்கை மேற்கொண்டனர்.

இந்நிகழ்விற்கு இலங்கை தோட்ட சேவையாளர் சங்கத்தின் தலைவர் நிஷாந்த வன்னிஆராச்சி, பொதுச் செயலாளர் ரொபர்ட பிரென்சிஸ் சங்கத்தின் துணைத்தலைவர் தனுக விஜயகுணரத்ன, உப தலைவர் நிஷாந்த கஹந்தவ ஆராச்சி ஆகியோர் கலந்து கொண்டனர்.

We call you back

Request a Call

Success! Your message has been sent to us.
Error! There was an error sending your message.

Save your career

Talk to a Specialist

CESU has been playing a leading role in many struggles of the working class and organizations of Civil Societies in Sri Lanka.

+94 112 573 948 info@cesusrilanka.org