NEWS AND BLOG

Ceylon Estate Staffs' Union (CESU)


சங்கத்தின் வேண்டுகோளினை அங்கிகரித்து...

சங்கத்தின் வேண்டுகோளினை அங்கிகரித்து

ஷாந்திலதா அவர்களின் பிள்ளைகளுக்கு கேகாலை பெருந்தோட்ட நிறுவனம் மரணாதாரக் கொடுப்பனவினை வழங்கியுள்ளது

கேகாலை பெருந்தோட்ட நிறுவனத்தின் கீழ் தொழிற்படும் ஹிக்கொடை தோட்டத்தில் சிரேஷ்ட எழுத்தாளராக கடமையாற்றிய இலங்கை தோட்ட சேவையாளர் சங்கத்தின் அங்கத்தவர் டீ.ஷாந்திலதா அவர்கள் திடீர் விபத்துக்குள்ளாகியதன் விளைவாக காலமானார். பெருந்தோட்ட நிறுவனம் மூலம் அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு மரணாதார கொடுப்பனவுகளை வழங்குமாறு இலங்கை தோட்ட சேவையாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரொபர்ட் பிரென்சிஸ் அவர்கள் மூலம் கேகாலை பெருந்தோட்ட கம்பனிக்கு எழுத்து மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பெப்பிரவரி 28ஆம் திகதி, கேகாலை பெருந்தோட்ட நிறுவனத்தின் செயற்பாட்டு இயக்குனர் சமன் தொரனேகம அவர்ளுடன் இ.தோ.சே.ச சதரகோரலே கிளையின் தலைவர் எம்.அயி.பீ.ஆர்.பண்டார, ஏற்பாட்டாளர் பாலித வன்னிஆராச்சி ஆகியோர் நடத்திய கலந்துரையாடலின் பின் ஷாந்திலதா அவர்களுக்கு உரிய மரணாதார கொடுப்பனவு அன்றைய தினமே அவர்களின் பிள்ளைகளுக்கு வழங்கப்பட்டது. 

We call you back

Request a Call

Success! Your message has been sent to us.
Error! There was an error sending your message.

Save your career

Talk to a Specialist

CESU has been playing a leading role in many struggles of the working class and organizations of Civil Societies in Sri Lanka.

+94 112 573 948 info@cesusrilanka.org