NEWS AND BLOG

Ceylon Estate Staffs' Union (CESU)


லிங்கேஷ்வரன் அவர்களுக்கு நிலுவை சம்பளத்துடன் மீண்டும் பணி

லிங்கேஷ்வரன் அவர்களுக்கு நிலுவை சம்பளத்துடன் மீண்டும் பணி

மடுல்சிம பெருந்தோட்ட நிறுவனத்தின் கீழ் தொழிற்படும் கல்லூல்ல தோட்டத்தில் கள அதிகாரியாக சேவையாற்றிய இலங்கை தோட்ட சேவையாளர் சங்கத்தின் பொதுக் குழு உறுப்பினர் எம். லிங்கேஷ்வரன் அவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த சேவை மறுப்பினை இரத்துச் செய்து நிலுவைச் சம்பளத்துடன் மீண்டும் அவரைப் பணியமர்த்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக இலங்கை தோட்ட சேவையாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

கல்லூல்ல தோட்டத்தில் இடம்பெற்ற ஒர் முறைகேடு தொடர்பில் 2022 டிசம்பர் மாதம் அத் தோட்ட அதிகாரி மூலம் உடனடியாக தொழிற்படும் வகையில் சம்பளம் இன்றி லிங்கேஷ்வரன் அவர்களின் சேவையை இடைநிறுத்தியதுடன் இது தொடர்பில் 2023 பெப்ரவரி மாதம் லிங்கேஷ்வரன் அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று பரிசோதணை ஒன்றினை ஆரம்பித்தது. இவ் ஒழுக்காற்று பரிசோதணையில் ஊவா கிளையின் தலைவர் கே.ஆர்.எல்.அயி.எம்.முணசிங்ஹ மற்றும் நிர்வாக குழு உறுப்பினர் டீ.எம்.சுமனதாச ஆகியோர் மூலம் சங்கத்தின் பொதுச் செயலாளர் மற்றும் தலைவர் அவர்களிடம் விடுத்த விசேட வேண்டுகோளுக்கு இணங்க லிங்கேஷ்வரன் அவர்களின் பாதுகாப்பு அதிகாரியாக இலங்கை தோட்ட சேவையாளர் சங்கத்தின் துணைத் தலைவர் தனுக விஜயகுணரத்ன அவர்கள் கலந்துக் கொண்டதாகவும் ஒழுக்காற்று பரிசோதனையில் லிங்கேஷ்வரன் அவர்களுக்கு எதிராகச் சாட்டப்பட்டிருந்த குற்றங்கள் நிரூபிக்கப்படாததால் குற்றச்சாட்டுகளில் இருந்து அவரை விடுதலை செய்து நிலுவை சம்பளத்துடன் மீண்டும் பணியமர்த்த மடுல்சிம பெருந்தோட்ட நிறுவனம் செயற்பாடுகள் முன்னெடுத்துள்ளது என பொதுச் செயலாளர் அவர்கள் சுட்டிக்காட்டினார். இங்கு நிறுவனம் மூலம் லிங்கேஷ்வரன் அவர்களுக்கு பட்டாவத்தை தோட்டத்திற்கு இடம்மாற்றம் செய்து மீண்டும் பணியமர்த்த செயற்பாடுகள் மேற்கொண்டுள்ளது. 

We call you back

Request a Call

Success! Your message has been sent to us.
Error! There was an error sending your message.

Save your career

Talk to a Specialist

CESU has been playing a leading role in many struggles of the working class and organizations of Civil Societies in Sri Lanka.

+94 112 573 948 info@cesusrilanka.org