NEWS AND BLOG

Ceylon Estate Staffs' Union (CESU)


விசாரணை அதிகாரிகளின் செயற்பாட்டிற்கு எதிராக...

விசாரணை அதிகாரிகளின் செயற்பாட்டிற்கு எதிராக பலாங்கொடை தோட்ட சேவையாளர்கள் எதிர்ப்பில்

பலாங்கொடை பெருந்தோட்டக் கம்பனியின் விசாரணை அதிகாரிகள் மூலம் மேற்கொள்ளும் விசாரணைகளின் போது கடைப்பிடிக்கும் அசாதாரணமான மற்றும் தன்னிச்சையான செயற்பாடுகளுக்கு எதிராக பலாங்கொடை பிரதேசத்தில் பணியில் ஈடுபடும் இலங்கை தோட்ட சேவையாளர் சங்கத்தின் அங்கத்தவர்கள் இன்று (15) ஒரு நாள் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த இலங்கை தோட்ட சேவையாளர் சங்கத்தின் தலைவர் நிஷாந்த வன்னிஆராச்சி அவர்கள் நியாயமான விசாரணைகள் நடப்பிப்பதற்கு மற்றும் அது தொடர்பில் செயற்பாடுகள் முன்னெடுப்பது தொடர்பிலும் சங்கத்திற்கு எவ்வித எதிர்ப்பும் இல்லை எனினும் பொய்யான மற்றும் கடந்த கால பெறுபேறுகளை அடிப்படையாகக் கொண்டு நடைமுறைப்படுத்தும் விசாரணைகளின் போது பக்கச்சார்பான மற்றும் எதேச்சதிகாரமான முடிவுகள் எடுப்பது தொடர்பில் சங்கத்தின் எதிர்ப்பினை தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். பெட்டிகல, ராஸ்ஸகல, ரய்விகிலிய, வலேபொட ஆகிய தோட்டங்களில் பணியாற்றும் இலங்கை தோட்ட சேவையாளர் சங்கத்தின் அங்கத்தவர்கள் இன்றைய தினம் சேவைக்கு சமூகமளிக்காது எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இவ் எதிர்ப்பு போராட்டச் செயற்பாடு இலங்கை தோட்ட சேவையாளர் சங்கத்தின் உப தலைவர் நிஷாந்த கஹந்தவஆராச்சி அவர்களின் தலைமைத்துவத்தின் கீழ் சபரகமுவை கிளைத் தலைவர் என்.எல்.குமார மற்றும் கிளைச் செயலாளர் புத்திக ரொஷான் ஆகியோரின் வழிநடத்தலில் வெற்றிகரமாக நடைப்பெறுகின்றது. 

We call you back

Request a Call

Success! Your message has been sent to us.
Error! There was an error sending your message.

Save your career

Talk to a Specialist

CESU has been playing a leading role in many struggles of the working class and organizations of Civil Societies in Sri Lanka.

+94 112 573 948 info@cesusrilanka.org