கிருஷ்ணகுமார் மீண்டும் பணிக்கு

பொகவந்தலாவ பெருந்தோட்டக் கம்பனியின் கீழ் தொழிற்படும் ஹட்டன் லெதன்டி தோட்ட தேயிலை தொழிற்சாலையின் பணிப்பெண் ஒருவருக்கு ஏற்பட்ட மின்தாக்கம் தொடர்பாக தோட்ட மேலாண்மை மூலம் அதன் மின்வல்லுனராக பணியாற்றிய கிருஷ்ணகுமார் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தனர். இது தொடர்பாக நடத்திய கலந்துரையாடலின் பின் அவருக்கு மீண்டும் சேவையை வழங்க தோட்ட நிர்வாகம் ஒப்புக்கொண்டுள்ளது. அக் கலந்துரையாடலுக்காக இலங்கை தோட்ட சேவையாளர் சங்கத்தின் ஹட்டன் கிளையின் பிரதேச செயலாளர் எம்.சுகுணேஷ்வரன் அவர்கள் கலந்து கொண்டார்.
https://www.facebook.com/photo/?fbid=730725818839297&set=a.596474555597758